புறநானூறு
நும்படை செல்லுங் காலை அவர்படை
எறித்தெறி தானை முன்னரை எனாஅ
அவர்படை வருஉங் காலை நும்படைக்
கூழை தாங்கிய அகல் யாற்றுக்
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ
அரிதால் பெரும நின் செவ்வி என்றும்
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை
இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
பெருமரக் கம்பம் போலப்
பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே
காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
Leave a Reply Cancel reply