ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த

புறநானூறு

ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த
மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்
பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி
அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை
கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்
ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகா மையின்
அறம்குறித் தன்று பொருளா குதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
கைபெய்த நீர் கடற் பரப்ப
ஆம் இருந்த அடை நல்கிச்
சோறு கொடுத்து மிகப் பெரிதும்
வீறுசான் நன்கலம் வீசி நன்றும்
சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்
வாய்வன் காக்கை கூகையடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல்என்று இல்வயின் பெயர மெல்ல
இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே

சிறுவெண்டேரையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *