நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்

புறநானூறு

நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யடு
கேள்விக்கு இனியை கட்கின் னாயே
அவரே நிற்காணின் புறங் கொடுத்தலின்
ஊறுஅறியா மெய் யாக்கை யடு
கண்ணுக்கு இனியர் செவிக்குஇன் னாரே
அதனால்நீயும் ஒன்று இனியைஅவரும் ஒன்றுஇனியர்
ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி
நின்னை வியக்குமிவ் வுலகம் அஃது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே

கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *