புறநானூறு
நீருள் பட்ட மாரிப் பேருறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்
உண்க என உணரா உயவிற்று ஆயினும்
தங்கனீர் சென்மோ புலவீர் நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்
குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்
குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ விலளே தன்னூர்
வேட்டக் குடிதொறுங் கூட்டு ________
__________________________ உடும்பு செய்
பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா
வம்பணி யானை வேந்துதலை வரினும்
உண்பது மன்னும் அதுவே
பரிசில் மன்னும் குருசில்கொண் டதுவே
Leave a Reply Cancel reply