நீர் நுங்கின் கண் வலிப்பக்

புறநானூறு

நீர் நுங்கின் கண் வலிப்பக்
கான வேம்பின் காய் திரங்கக்
கயங் களியும் கோடை ஆயினும்
ஏலா வெண்பொன் போகுறு காலை
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்
என்றுஈத் தனனே இசைசால் நெடுந்தகை
இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்
செலினே காணா வழியனும் அல்லன்
புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்
செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்
ஆத னுங்கன் போல நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட
வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும
ஐதுஅகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே

கள்ளில் ஆத்திரையனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *