நனிபே தையே நயனில் கூற்றம்

புறநானூறு

நனிபே தையே நயனில் கூற்றம்
விரகுஇன் மையின் வித்துஅட்டு உண்டனை
இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்
ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய
நாளும் ஆனான் கடந்துஅட்டு என்றும் நின்
வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை ஆயின்
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே

ஆடுதுறை மாசாத்தனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *