புறநானூறு
மென் புலத்து வயல் உழவர்
வன் புலத்துப் பகடு விட்டுக்
குறு முயலின் குழைச் சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல்
பழஞ் சோற்றுப் புக வருந்திப்
புதல் தளவின் பூச் சூடி
அரில் பறையாற் புள்ளோப்பி
அவிழ் நெல்லின் அரியலா ருந்து
மனைக் கோழிப் பைம்பயி ரின்னே
கானக் கோழிக் கவர் குரலொடு
நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து
வே யன்ன மென் தோளால்
மயில் அன்ன மென் சாயலார்
கிளிகடி யின்னே
அகல் அள்ளற் புள்இரீஇ யுந்து
ஆங்கப் பலநல்ல புலன் அணியும்
சீர்சான்ற விழுச் சிறப்பின்
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம் பெரும
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்
தன்கடைத் தோன்றி என் உறவு இசைத்தலின்
தீங்குரல் கின் அரிக்குரல் தடாரியடு
ஆங்கு நின்ற எற் கண்டு
சிறிதும் நில்லான் பெரிதுங் கூறான்
அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
ஐயென உரைத்தன்றி நல்கித் தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டிஇவனை
என்போல் போற்று என் றோனே அதற்கொண்டு
அவன்மறவ லேனே பிறர்உள்ள லேனே
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்
மிக வானுள் எரி தோன்றினும்
குள மீனோடும் தாள் புகையினும்
பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த
விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க என
உள்ளதும் இல்லதும் அறியாது
ஆங்குஅமைந் தன்றால் வாழ்க அவன் தாளே
மதுரை நக்கீரர்
Leave a Reply Cancel reply