மென் பாலான் உடன் அணைஇ

புறநானூறு

மென் பாலான் உடன் அணைஇ
வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்
வன் பாலான் கருங்கால் வரகின்
_____________________________________
அங்கண் குறுமுயல் வெருவ அயல
கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து
விழவின் றாயினும் உழவர் மண்டை
இருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து
____________கிணையேம் பெரும
நெல் என்னாம் பொன் என்னாம்
கனற்றக் கொண்ட நறவு என்னும்
____________மனை என்னா அவை பலவும்
யான் தண்டவும் தான் தண்டான்
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
மண் நாணப் புகழ் வேட்டு
நீர் நாண நெய் வழங்கிப்
புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
யாண்டு நிற்க வெள்ளி மாண்ட
உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
வந்த வைகல் அல்லது
சென்ற எல்லைச் செலவு அறி யேனே

புறத்திணை நன்னாகனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *