மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்

புறநானூறு

மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே இனியே
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் – வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்
நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *