புறநானூறு
மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண் கனி செத்து அடிப்பின்
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
ஆடு மகள் குறுகின் அல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
Leave a Reply Cancel reply