புறநானூறு
மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
புலாஅல் அம்பின் போர்அருங் கடிமிளை
வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே சென்மதி நீயே சென்று அவன்
பகைப்புலம் படரா அளவை நின்
பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்
Leave a Reply Cancel reply