புறநானூறு
மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீ நிழற் றிசினே
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே
மோசிசாத்தனார்
Leave a Reply Cancel reply