புறநானூறு
மாசு விசும்பின் வெண் திங்கள்
மூ வைந்தான் முறை முற்றக்
கடல் நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா மரபு ஏத்திக்
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன் எந்தை என் தெண்கிணைக் குரலே
கேட்டற் கொண்டும் வேட்கை தண்டாது
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
_____________________________லவான
கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி
நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து
போ தறியேன் பதிப் பழகவும்
தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
மறவர் மலிந்ததன் ________________
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்
துறைதொறும் பிணிக்கும் நல்லூர்
உறைவின் யாணர் நாடுகிழ வோனே
கோவூர் கிழார்
Leave a Reply Cancel reply