புறநானூறு
குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
கூந்தல் கொய்து குறுந்தொடு நீக்கி
அல்லி உணவின் மனைவியடு இனியே
புல்என் றனையால் வளங்கெழு திருநகர்
வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே
தாயங் கண்ணியார்
Leave a Reply Cancel reply