புறநானூறு
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி நீயேநெருநை
எம்முன் தப்பியோன் தம்பியடு ஓராங்கு
நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்
புன்வயிறு அருத்தலும் செல்லான் வன்மான்
கடவும் என்ப பெரிதே அது கேட்டு
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
இரண்டா காது அவன் கூறியது எனவே
அரிசில்கிழார்
Leave a Reply Cancel reply