கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்

புறநானூறு

கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே
அவன் எம் இறைவன் யாம்அவன் பாணர்
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்
சென்று வாய் சிவந்துமேல் வருக
சிறுகண் யானை வேந்து விழுமுறவே

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *