கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்

புறநானூறு

கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்
முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம இயல்தேர் அண்ணல்
இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்
உள்ளி வருநர் நசையிழப் போரே
அனையையும் அல்லை நீயே ஒன்னார்
ஆர்எயில் அவர்கட்கு ஆகவும் நுமது எனப்
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்
பூண்கடன் எந்தை நீஇரவலர் புரவே

ஊன்பொதி பசுங்குடையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *