கார் எதிர் உருமின் உரறிக் கல்லென

புறநானூறு

கார் எதிர் உருமின் உரறிக் கல்லென
ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்
நின்வரவு அஞ்சலன் மாதோ நன்பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத்
தாயின்நன்று பலர்க்கு ஈத்துத்
தெருணடை மாகளிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்
உருள்நடைப் பஃறேர் ஒன்னார்க் கொன்றுதன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்
புரி மாலையர் பாடி னிக்குப்
பொலந் தாமரைப் பூம் பாணரொடு
கலந் தளைஇய நீள் இருக் கையால்
பொறையடு மலிந்த கற்பின் மான்நோக்கின்
வில்என விலங்கிய புருவத்து வல்லென
நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ மெல்லென
கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி
அமிழ்தென மடுப்ப மாந்தி இகழ்விலன்
நில்லா உலகத்து நிலையாமைநீ
சொல்லா வேண்டா தோன்றல் முந்துஅறிந்த
முழுதுஉணர் கேள்வியன் ஆகலின் விரகினானே

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *