கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்

புறநானூறு

கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்
புல்வாய் இரலை நெற்றி யன்ன
பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி என்
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
இருங்கலை ஓர்ப்ப இசைஇக் காண்வரக்
கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்
புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறா அர்
மான்கண் மகளிர் கான்தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்
புகர்முக வேழத்து முருப்பொடு மூன்றும்
இருங்கேழ் வயப்புலி வரி அதள் குவைஇ
விரிந்து இறை நல்கும் நாடன் எங்கோன்
கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ ஞாயிறு
கொன்விளங் குதியால் விசும்பி னானே

உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *