இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்

புறநானூறு

இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்
இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெரும நிற் குறித்துவரு வேலே

ஔவையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *