இவர் யார் என்குவை ஆயின் இவரே

புறநானூறு

இவர் யார் என்குவை ஆயின் இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப்பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர் யானே
தந்தை தோழன் இவர்என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை ஆண்டு
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போர் அண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்
யான்தர இவரைக் கொண்மதி வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *