இரவலர் புரவலை நீயும் அல்லை

புறநானூறு

இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி நின்ஊர்க்
கடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடுநல் யானை எம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே

பெருஞ்சித்திரனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *