புறநானூறு
எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
யாண்டுளனோவென வினவுதி ஆயின்
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
பலகை அல்லது களத்துஒழி யதே
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
நாநவில் புலவர் வாய் உளானே
பெருங்கடுங்கோ
Leave a Reply Cancel reply