ஈரச் செவ்வி உதவின ஆயினும்

புறநானூறு

ஈரச் செவ்வி உதவின ஆயினும்
பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி
வீறுவீறு ஆயும் உழவன் போலப்
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
மூதி லாளர் உள்ளும் காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
இவற்கு ஈக என்னும் அதுவும்அன் றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறைப்
பூக்கோள் இன்று என்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே

கழாத்தலையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *