அருளா யாகலோ கொடிதே இருள்வரச்

புறநானூறு

அருளா யாகலோ கொடிதே இருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
கார்எதிர் கானம் பாடினே மாக
நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து வார் அரிப் பனி பூண்அகம் நனைப்ப
இனைதல் ஆனா ளாக இளையோய்
கிளையை மன் எம் கேள்வெய் யோற்குஎன
யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள்
முகைபுரை விரலின் கண்ணீர் துடையா
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள்இனி
எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *