அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்

புறநானூறு

அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து தாய்இ லாளர்
அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்
விழவணி வியன்களம் அன்ன முற்றத்து
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர்
கடவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்
மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப வென்
அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பன்னாள் அன்றியும்
சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின்
வந்ததற் கொண்டு நெடுங்கடை நின்ற
புன்தலைப் பொருநன் அளியன் தான் எனத்
தன்உழைக் குறுகல் வேண்டி என்அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்நடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்
கொண்டி பெறுக என் றோனே உண்துறை
மலைஅலர் அணியும் தலைநீர் நாடன்
கண்டார் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி
_______________________________________
வான்அறி யலவென் பாடுபசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ அறியலர் காண்பறி யலரே

ஔவையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *