புறநானூறு
அன்ன வாக நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம் அடுபோர்ப் பேக
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புல
நன்னாடு பாட என்னை நயந்து
பரிசில் நல்குவை யாயின் குரிசில் நீ
நல்கா மையின் நைவரச் சாஅய்
அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே
அரிசில் கிழார்
Leave a Reply Cancel reply