அளிய தாமே சிறுவெள் ளாம்பல்

புறநானூறு

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளையம் ஆகத் தழையா யினவே இனியே
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படுஉம் புல் ஆயினவே

ஒக்கூர் மாசாத்தனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *