அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி

புறநானூறு

அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி
நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற்
பொதியில் ஒருசிறை பள்ளி யாக
முழாவரைப் போந்தை அரவாய் மாமடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் எனப்
புரசம் தூங்கும் அறாஅ யாணர்
வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந
பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்
யாவரும் இன்மையின் கிணைப்பத் தாவது
பெருமழை கடல்பரந் தாஅங்கு யானும்
ஒருநின் உள்ளி வந்தனென் அதனால்
புலவர் புக்கில் ஆகி நிலவரை
நிலீ இயர் அத்தை நீயே ஒன்றே
நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து
நிலவன் மாரோ புரவலர் துன்னிப்
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடின்று பெருகிய திருவின்
பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *