இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்

புறநானூறு

இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே
நல்லரா உறையும் புற்றம் போலவும்
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
உளன் என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *