புறநானூறு
அடலருந் துப்பின் _______________
_____________ குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே
மாங்குடி கிழார்
Leave a Reply Cancel reply