புறநானூறு
வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
அன்னோ பெரும்பே துற்றன்று இவ் வருங்கடி மூதூர்
அறன்இலன் மன்ற தானே விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே
பரணர்
Leave a Reply Cancel reply