புறநானூறு
ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
நெல் மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின்
படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
பெருஞ்சீர் அருங்கொண் டியளே கருஞ்சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் தரினும் தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று
உணங்குகலன் ஆழியின் தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே
குன்றூர் கிழார் மகனார்
Leave a Reply Cancel reply