புறநானூறு
செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை
செறிவளை மகளிர் பறந்தெழுந்து
துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு
நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ
புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து
பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ
இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி
கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே
Leave a Reply Cancel reply