உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில

புறநானூறு

உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் பஃறேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்
மணநாறு மார்பின் மறப்போர் அகுதை
குண்டுநீர் வரைப்பின் கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப
____________________________________________
என்னா வதுகொல் தானே _______
விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்
வினைநவில் யானை பிணிப்ப
வேர்துளங் கினநம் ஊருள் மரனே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *