புறநானூறு
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்
கள்ளரிக்கும் குயம் சிறுசின்
மீன் சீவும் பாண் சேரி
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன
குவளை உண்கண் இவளைத் தாயே
ஈனா ளாயினள் ஆயின் ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
செந்நுதல் யானை பிணிப்ப
வருந்தல மன் எம் பெருந்துறை மரனே
பரணர்
Leave a Reply Cancel reply