ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

புறநானூறு

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின் என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே

நெட்டிமையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

Next Post

வழிபடு வோரை வல்லறி தீயே

Related Posts

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

புறநானூறு இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்துமன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்நின்னொடு தூக்கிய வென்வேற் செழியஇரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டியபெருங்கல் அடாரும்…
Read More

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

புறநானூறு திண் பிணி முரசம் இழுமென முழங்கச்சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டுஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்நோய்ப்பால் விளிந்த யாக்கை…
Read More

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

புறநானூறு காய்நெல் அறுத்துக் கவளங் கொளினேமாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினேவாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினேகோடி யாத்து…
Read More