புறநானூறு
பெரிது ஆராச் சிறு சினத்தர்
சில சொல்லால் பல கேள்வியர்
நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர்
கலுழ் நனையால் தண் தேறலர்
கனி குய்யாற் கொழுந் துவையர்
தாழ் உவந்து தழூஉ மொழியர்
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி
ஏம மாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே பெரும கேள் இனி நாளும்
பலரே தகை அஃது அறியா தோரே
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
இன்னும் அற்று அதன் பண்பே அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி அச்சுவரப்
பாறுஇறை கொண்ட பறந்தலை மாகத
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றைக் கள்ளடு
புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி
புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு
அழல்வாய்ப் புக்க பின்னும்
பலர்வாய்த்து இராஅர் பகுத்துஉண் டோரே
சங்க வருணர் என்னும் நாகரியர்
Leave a Reply Cancel reply