மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக

புறநானூறு

மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய இருசுடர் கண் எனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்
பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
உள்ளேன் வாழியர் யான் எனப் பன்மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே

மார்க்கண்டேயனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *