மண் திணிந்த நிலனும்

புறநானூறு

மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அணியும் உடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகல்இருளினும்
நாஅல் வேதநெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

முரஞ்சியூர் முடிநாகராயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கண்ணி கார் நறுங்கொன்றை காமர்

Next Post

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை

Related Posts

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

புறநானூறு வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகிநெடிய என்னாது சுரம்பல கடந்துவடியா நாவின் வல்லாங்குப் பாடிப்பெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்திஓம்பாது உண்டு கூம்பாது வீசிவரிசைக்கு வருந்தும்இப்…
Read More

பாணர் தாமரை மலையவும் புலவர்

புறநானூறு பாணர் தாமரை மலையவும் புலவர்பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்அறனோ மற்றஇது விறல்மாண் குடுமிஇன்னா ஆகப் பிறர் மண் கொண்டுஇனிய செய்தி நின் ஆர்வலர்…
Read More

இளையரும் முதியரும் வேறுபுலம் படர

புறநானூறு இளையரும் முதியரும் வேறுபுலம் படரஎதிர்ப்ப எழாஅய் மார்பமண் புல்லஇடைச்சுரத்து இறுத்த மள்ள விளர்த்தவளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்இன்னன் ஆயினன் இளையோன் என்றுநின்னுரை செல்லும்…
Read More