புறநானூறு
கீழ் நீரால் மீன் வழங்குந்து
மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழி சுற்றிய விளை கழனி
அரிப் பறையாற் புள் ளோப்புந்து
நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்
மென் பறையாற் புள் இரியுந்து
நனைக் கள்ளின் மனைக் கோசர்
தீந் தேறல் நறவு மகிழ்ந்து
தீங் குரவைக் கொளைத்தாங் குந்து
உள்ளி லோர்க்கு வலியா குவன்
கேளி லோர்க்குக் கேளா குவன்
கழுமிய வென்வேல் வேளே
வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
கிணை யேம் பெரும
கொழுந் தடிய சூடு என்கோ
வளநனையின் மட்டு என்கோ
குறு முயலின் நிணம் பெய்தந்த
நறுநெய்ய சோறு என்கோ
திறந்து மறந்து கூட்டு முதல்
முகந்து கொள்ளும் உணவு என்கோ
அன்னவை பலபல ______________
_________________________ வருந்திய
இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை
எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே
மாரி வானத்து மீன் நாப்பண்
விரி கதிர வெண் திங்களின்
விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
நிரைசால் நன்கலன் நல்கி
உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே
மாங்குடி கிழார்
Leave a Reply Cancel reply