புறநானூறு
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மெந்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே
கபிலர்
Leave a Reply Cancel reply