கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்

புறநானூறு

கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்துஅடிக் காரி நின் நாடே
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன் ‘துப்பா கியர்’ என
ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலைநீ பெருமிதத் தையே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *