புறநானூறு
முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க என் செவியே
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமையம்
தென்திசை ஆஅய் குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
Leave a Reply Cancel reply