யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப

புறநானூறு

யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
இழை வலந்த பஃறுன்னத்து
இடைப் புரைபற்றிப் பிணி விடாஅ
ஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்த
பேஎன் பகையென ஒன்று என்கோ
உண்ணா மையின் ஊன் வாடித்
தெண் ணீரின் கண் மல்கிக்
கசிவுற்ற என் பல் கிளையடு
பசி அலைக்கும் பகைஒன் றென்கோ
அன்ன தன்மையும் அறிந்து ஈயார்
நின்னது தா என நிலை தளர
மரம் பிறங்கிய நளிச் சிலம்பின்
குரங் கன்ன புன்குறுங் கூளியர்
பரந் தலைக்கும் பகைஒன் றென்கோ
ஆஅங்கு எனைப் பகையும் அறியுநன் ஆய்
எனக் கருதிப் பெயர் ஏத்தி
வா யாரநின் இசை நம்பிச்
சுடர் சுட்ட சுரத்து ஏறி
இவண் வந்த பெரு நசையேம்
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப வென
அனைத் துரைத்தனன் யான்ஆக
நினக்கு ஒத்தது நீ நாடி
நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்
தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
நுண்பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே

துறையூர் ஓடை கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *