ஆனினம் கலித்த அதர்பல கடந்து

புறநானூறு

ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலையின் ஒழிய
மீளினம் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண
நீயே பேரெண் ணலையே நின்இறை
’மாறி வா’ என மொழியலன் மாதோ
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே

மருதன் இளநாகனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *