இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

புறநானூறு

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

சாத்தந்தையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

Next Post

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

Related Posts

அறையும் பொறையும் மணந்த தலைய

புறநானூறு அறையும் பொறையும் மணந்த தலையஎண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-கூர் வேல் குவைஇய மொய்ம்பின்தேர்வண் பாரி…
Read More

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

புறநானூறு அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்குஇரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றேபூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகிநோக்கிய மகளிர்ப் பிணித்தன்று…
Read More

அரி மயிர்த் திரள் முன்கை

புறநானூறு அரி மயிர்த் திரள் முன்கைவால் இழை மட மங்கையர்வரி மணற் புனை பாவைக்குக்குலவுச் சினைப் பூக் கொய்துதண் பொருநைப் புனல் பாயும்விண் பொருபுகழ்…
Read More