புறநானூறு
சுவல் அழுந்தப் பல காய
சில் லோதிப் பல்இளை ஞருமே
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலிய ருமே
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன் மெய் கூறுவல்
ஓடாப் பூட்கை உரவோர் மருக
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந
மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்
கனிபதம் பார்க்கும் காலை யன்றே
ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
அருஞ் சமம் வருகுவ தாயின்
வருந்தலு முண்டு என் பைதலங் கடும்பே
மருதன் இளநாகனார்
Leave a Reply Cancel reply