பாணன் சூடிய பசும்பொன் தாமரை

புறநானூறு

பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்
யாரீ ரோ என வனவல் ஆனாக்
காரென் ஒக்கல் கடும் பசி இரவல
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈதல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே

பரணர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *