புறநானூறு
மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்
மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர் சாரல்
புனைத்தினை அயிலும் நாட சினப் போர்க்
கைவள் ஈகைக் கடுமான் பேக
யார்கொல் அளியள் தானே நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும்நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே
கபிலர்
Leave a Reply Cancel reply