ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புறநானூறு

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை
இன்றின் ஊங்கோ கேளலம் திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

Next Post

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

Related Posts

போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

புறநானூறு போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மைஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐநுண்பல் கருமம் நினையாதுஇளையன் என்று…
Read More

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

புறநானூறு சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்புலி சேர்ந்து போகிய கல்அளை போலஈன்ற வயிறோ இதுவேதோன்றுவன் மாதோ போர்க்களத் தானே…
Read More